பிரகாச நடிகர்க்கு வந்த சோதனை:
மனைவி நடிகையின் படம் தான் அந்த தளத்தில் வெளியாகும் என்றும், என் படம் கண்டிப்பா தியேட்டரில் தான் வெளியாகும் என தனது ரசிகர்களுக்கு உறுதியான வாக்கு கொடுத்து இருந்தார் அந்த பிரகாச நடிகர். ஆனால், காலம் ஆக ஆக அவருக்கு வந்த பிரஷர், அது போன மாசம்.. இது இந்த மாசம் ரேஞ்சுக்கு ஆளே மாறி விட்டார்.
கொடுக்கிறத கொடுங்க ஆரம்பத்தில் சொன்ன தொகைக்கே தற்போதும் அந்த படத்தை விற்றுள்ளாராம் அந்த பிரகாச நடிகர். முன்னதாக பேரம் பேசப்பட்ட போதே, விற்று இருந்தால், கொஞ்சம் கூடுதல் தொகை கிடைத்திருக்கும் என்றும், தற்போது வட்டி பிரச்சனை மற்றும் குடும்ப பிரஷர் தாங்க முடியாமல் கொடுக்கிறத கொடுங்க என சரண்டர் ஆகி உள்ளதாக கோலிவுட்டில் சிலர் பேசிக் கொள்கின்றனர்.
பிரபல ஹீரோனுக்கு பல கோடி இழப்பாம்..!
கோடி ரூபாய் சில நடிகைகள், இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அப்டேட் பண்ணுவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹீரோயின் ஒருவர் ஐந்து கோடி ரூபாயை இந்த லாக்டவுனால் இழந்துவிட்டதாக வருத்தத்தில் இருக்கிறாராம். அந்த ஹீரோயின் தமிழில் கண்ணாடி இயக்குனரின் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த மாஸ் ஹீரோவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.கான் ஹீரோவுடன் ஆனால், தெலுங்கில் டாப்புக்கு சென்றுவிட்ட அவர், இப்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
பாகுபலி நடிகருடன் அவர் நடித்த தெலுங்கு படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் மட்டுமே பாக்கி. அடுத்து இந்தியில் அந்த டாப் கான் ஹீரோவுடன் நடித்து வருகிறார். அவர் கேரியர் கிராப், இப்படி ஜிவ்வென்று ஏறிக்கொண்டிருந்த நிலையில்தான் கொரோனா அதற்கு பிரேக் போட்டிருக்கிறது.இந்தியில் அந்த டாப் கான் படத்தை அடுத்து மேலும் சில படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஒப்பந்தத்துடன் அட்வான்ஸ் கொடுக்கக் காத்திருந்தார்களாம். அதற்குள் லாக்டவுன், இப்படி லாக் பண்ணிவிட, மொத்தமாக ஐந்து கோடி ரூபாய் போச்சே என்று தனக்கு வேண்டியவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார்.