முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கும் டுவிட்டரில் புதிய வசதி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பயனர்களுக்கு குரல்வழி முறையிலான தகவல்களை பரிமாறுவதற்கு புதிய வசதி வழங்கியுள்ளது.
அதுவும் நேரடி குறுஞ்செய்தியாக இதுபோன்று குரல்வழி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். இந்த தகவலை டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் Alex Ackerman Greenberg என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வசதியானது தற்போது பரிசீலிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பரிசீலிப்பானது தற்போது பிரேஸில் நாட்டில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே மற்ற நாடுகளிலும் டுவிட்டர் பயனர்கள் இந்த வசதியினைப் பெற முடியும்.